செய்திகள்
அரவக்குறிச்சி அருகே லாரி மோதி கார் டிரைவர் பலி
அரவக்குறிச்சி அருகே லாரி மோதி கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 46). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பநாயக்கன் பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஒரு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பெட்ரோல் போடவந்த லாரியின் டிரைவர் ஹரிகரன் (28) என்பவர் முத்துசாமி அங்கு படுத்து கிடப்பதை அறியாமல் பின்பக்கமாக லாரியை ஓட்டினார். இதில் முத்துசாமி லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஹரிகரனை கைது செய்தனர்,