செய்திகள்
தற்கொலை

கோவை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வி‌ஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2021-05-11 10:28 GMT   |   Update On 2021-05-11 10:28 GMT
கோவை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வி‌ஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குனியமுத்தூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒக்கரையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கார்த்திக்கின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். எனவே அவர் தனியாக வசித்து வந்தார். மேலும் 30 வயதான தனக்கு திருமணம் செய்து வைக்க யாருமே இல்லை என்பதால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று கார்த்திக் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திக் கழிவறையில் சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News