செய்திகள்
சுவாமிமலை அருகே பெண்ணை வழிமறித்து 5 பவுன் செயின் பறிப்பு
சுவாமிமலை அருகே பெண்ணை வழிமறித்து 5 பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பகுதி நாகக்குடி மெயின்ரோடு காமராஜ் நகரில் வசித்து வருபவர் சவுந்தரராஜன் சித்ரா(வயது47).
பாபநாசத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு மொபட்டில் சித்ரா வந்தபோது சோழன் நகரில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் அவரை வழிமறித்து 5 பவுன் செயினை பறித்து சென்று விட்டனராம்.
இதுபற்றி அவர் சுவாமிமலை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.