செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓபன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Published On 2021-05-10 16:09 GMT   |   Update On 2021-05-10 16:09 GMT
சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார்.
சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

இந்தநிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதிற்கு பிறகு ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
Tags:    

Similar News