செய்திகள்
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மிகவும் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது - பள்ளிகல்வித்துறை அமைச்சர்

Published On 2021-05-10 12:41 GMT   |   Update On 2021-05-10 12:41 GMT
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகவும் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தி உள்ளார்.

மற்ற மாநிலங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News