செய்திகள்
தஞ்சை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள சிங்கப்பெருமாள்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்பவரின் மனைவி ஷீலா (வயது 29). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஷீலா அவருடைய வீட்டில் யாரும் இல்லாதபோது எலிபேஸ்ட்டை தின்று விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.