செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து சப்ளை தொடரவேண்டும் -மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-05-10 10:41 GMT   |   Update On 2021-05-10 14:41 GMT
கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் மோசமான நிலை வராமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.
சென்னை:

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘தேசிய நிபுணர் குழு பரிந்துரை அளிக்கும் வரை மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை செய்ய வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும். கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை வராமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News