செய்திகள்
மாநகரப் பேருந்து

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

Published On 2021-05-10 04:24 GMT   |   Update On 2021-05-10 09:57 GMT
மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியிருப்பதாவது:

* சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

* முதல்கட்டமாக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.



* மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News