செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவருக்கு பதிலாக வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி உள்ளார். ஊரக வளர்ச்சி துறையிலும் மிகுந்த அனுபவம் கொண்ட அவர் கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக திகழ்ந்துள்ளார்.