செய்திகள்
தாலுகா அலுவலகம் மூடல்

அவினாசியில் தாசில்தார் உள்பட 5 பேருக்கு கொரோனா - தாலுகா அலுவலகம் மூடல்

Published On 2021-05-08 22:15 GMT   |   Update On 2021-05-08 22:15 GMT
அவினாசி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தார் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவினாசி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவினாசி வட்டாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மின்வாரிய அதிகாரி, கிராம நிர்வாக உதவியாளர் என பல்வேறு நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 32 வயதுடைய அவினாசி கிராம நிர்வாக உதவியாளர், பெரியாயிபாளையத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், மற்றும் மங்கலம் ரோட்டை சேர்ந்த 73 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தார் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவினாசி தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
Tags:    

Similar News