செய்திகள்
கைது

தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-05-08 13:17 GMT   |   Update On 2021-05-08 13:17 GMT
தியாகதுருகம் அருகே முன் விரோத தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்டாச்சிமங்கலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் பிரபு (வயது 30), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(50) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. 

சம்பவத்தன்று பிரபு தனக்கு சொந்தமான வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சாமிதுரை மற்றும் அவருடைய நண்பர்களான பாலசுப்பிரமணியன் (40), சக்கரவர்த்தி (65) ஆகியோர் பிரபுவை வழிமறித்து உருட்டை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரபு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சாமிதுரை உள்பட 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து, பாலசுப்பிரமணியன், சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News