செய்திகள்
தற்கொலை

தாராபுரம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-05-07 22:14 GMT   |   Update On 2021-05-08 09:48 GMT
தாராபுரம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:

தாராபுரம் என்.ஏ.எஸ்.நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது65) கார் டிரைவர். இவருடைய மனைவி பொன்னுத்தாயி (60). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.அப்போது மனைவியை தேடியபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் அருகில் உள்ளவர்களை அழைத்து பொன்னுத்தாயை கீழே இறக்கினார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டபொன்னுத்தாயிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
Tags:    

Similar News