செய்திகள்
கோப்புபடம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் 25 பேர் மீது வழக்கு

Published On 2021-05-07 15:33 GMT   |   Update On 2021-05-07 15:33 GMT
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்:

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று முன்தினம் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன் உள்பட 25 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News