செய்திகள்
விபத்து

வேடசந்தூர் அருகே லாரி மோதி பூக்கடை ஊழியர் பலி

Published On 2021-05-07 11:01 GMT   |   Update On 2021-05-07 11:01 GMT
வேடசந்தூர் அருகே லாரி மோதி பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவர், வேடசந்தூரில் உள்ள பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டி பிடித்தனர். மேலும் லாரியை ஓட்டிய கரூர் மாவட்டம் சங்கரன்மலைப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலகுமரன் (21) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News