செய்திகள்
வைகோ

பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது- வைகோ

Published On 2021-05-07 10:13 GMT   |   Update On 2021-05-07 10:13 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.
சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.



இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளும், பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News