செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - 2 பேர் கைது

Published On 2021-05-07 09:41 GMT   |   Update On 2021-05-07 09:41 GMT
தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியை சேர்ந்தவர் தீன்முகமது (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் இவருடைய நண்பர் முத்துவேல். இருவரும் டேங்கர் லாரியில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது அற்புதாபுரம் சோதனைச் சாவடி அருகே மேட்டுப்பட்டி செந்தில்குமார், குருங்குளம் விஜயகுமார் ஆகிய இருவரும் வழிமறித்து தீன்முகமதுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். 

இதில் படுகாயமடைந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் (37), விஜயகுமார்(41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News