செய்திகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-05-06 23:39 GMT   |   Update On 2021-05-06 23:39 GMT
முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
சென்னை:

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பொது சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News