செய்திகள்
மேற்குவங்க கலவரத்தை கண்டித்து பல்லடத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பல்லடத்தில் மம்தாபானர்ஜி அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
இந்த நிலையில் நந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றதன் காரணமாக காழ்புணர்ச்சியில் பா.ஜ.க. தொண்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாகவும். பா.ஜ.க.வினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியும், பா.ஜ.க.கட்சி அலுவலகங்கள், மற்றும் பா.ஜ.க.வினரின் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும், அங்கு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க கோரியும் பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.