செய்திகள்
தமிழகத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது- துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேச்சும் அவரது ஆதரவும்தான் காரணம்.
வெற்றி சான்றிதழை பெற்றதும் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகளுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அவர் பாதம் பட்டதும் ஒரு காரணம். அதுபோல தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேச்சும் அவரது ஆதரவும்தான் காரணம். தமிழகத்தில் மீண்டும் புதிய ஆட்சி அமைகிறது. இதன்மூலம் மறுமலர்ச்சி ஏற்படுவது மட்டுமின்றி ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.