செய்திகள்
கொரோனா விதிமீறல்: அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம், குன்னத்தூர் அம்மன் கோவில் வளாகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர் ஏஜென்டுகள் மற்றும் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரி மதுரை வீரன் டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் பாவாடையான், வக்கீல் பிரிவு செயலாளர் பாஸ்கரன் உள்பட அ.தி.மு.க.வினர் 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.