செய்திகள்
வெற்றி உற்சாகம் கொரோனா பரவலுக்கு காரணமாக கூடாது- ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
வெற்றி பெற்ற உற்சாகம், எந்தவிதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நாளை (2-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை மூலம் அறிவிக்கப்பட இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றி கொண்டாட்டங்கள் இருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த கட்டுப்பாட்டுகளையும், கோட்பாடுகளையும் அலட்சியம் செய்யாமல் அனைத்து கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முகாம்களுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம்.
தற்பொழுது உள்ள கொரோனா பரவலால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கும் நேரத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிப்பெற்ற உற்சாகம், எந்த விதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நாளை (2-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை மூலம் அறிவிக்கப்பட இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றி கொண்டாட்டங்கள் இருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த கட்டுப்பாட்டுகளையும், கோட்பாடுகளையும் அலட்சியம் செய்யாமல் அனைத்து கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முகாம்களுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம்.
தற்பொழுது உள்ள கொரோனா பரவலால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கும் நேரத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிப்பெற்ற உற்சாகம், எந்த விதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.