செய்திகள்
கோப்புபடம்

திசையன்விளை அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-04-29 12:53 GMT   |   Update On 2021-04-29 12:53 GMT
திசையன்விளை நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் எட்வின் மீன்மார்க்கெட்டில் முககவசம் அணியாத 6 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தார்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாத 21 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வீதம் வசூலித்தனர்.

இதேபோல் திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுப்புராயல், வருவாய் ஆய்வாளர் துரைசாமி ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகாரருக்கு ரூ.500-ம், முககவசம் அணியாத 6 பேரிடம் தலா ரூ. 200 வீதம் அபராதம் வசூலித்தனர்.

திசையன்விளை நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் எட்வின் மீன்மார்க்கெட்டில் முககவசம் அணியாத 6 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தார்.

Tags:    

Similar News