செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 அதிகரித்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 35,648-க்கு விற்பனையாகிறது.
சென்னை
தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டு வந்தது. கடந்த 22-ந் தேதி முதல் விலை குறைந்தபடியே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 440-க்கு விற்றது.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 208 அதிகரித்து ரூ. 35 ஆயிரத்து 648-க்கு விற்றது.
கிராமுக்கு ரூ. 26உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 456 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.90-க்கு விற்படையாகிறது.