செய்திகள்
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை- கலெக்டர் தகவல்

Published On 2021-04-26 17:33 GMT   |   Update On 2021-04-26 17:33 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நிலைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞசீபுரம் மாவட்டத்தில் இதுவரை 81 கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 239 ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கைகளும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 180 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

மாவட்டத்தில் இதுவரை 59 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் செல்லும் வாகனங்களுக்கு காவல் பாதுகாப்போடு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News