கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமையில் இருக்காமல் வெளியே சென்ற நபர் மீது வழக்கு
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள ஆவாரம் பாளையத்தை சேர்ந்த 55 வயது ஆண்.
இவருக்கு கடந்த 16-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்கா இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்.
அவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் 7 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு கிருமி நாசினி அடிப்பதற்காக சென்றனர். அவர் அவர் வீட்டில் இல்லை.
இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பி வீட்டில் தனிமைப் படுத்தி கொள்ளாமல் வெளியே சென்ற நபர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.