செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

மகாவீர் ஜெயந்தி- தமிழக கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து

Published On 2021-04-24 08:57 GMT   |   Update On 2021-04-24 08:57 GMT
ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியின் புனித சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஜெயின் சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, உண்மை மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டு காட்டின.

ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அமைதியான, இணக்கமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.

கொரோனா தடுப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News