செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-04-24 07:25 GMT   |   Update On 2021-04-24 07:25 GMT
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அனைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,342 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று இது 1,439 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணை நீர்மட்டம் 97.57 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

Tags:    

Similar News