செய்திகள்
கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை
கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பருத்திமேடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 41), தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.