செய்திகள்
உயிரிழப்பு

மதுரையில் தற்கொலைக்கு முயன்றவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

Published On 2021-04-23 10:42 GMT   |   Update On 2021-04-23 10:42 GMT
மதுரையில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
மதுரை:

மதுரை வலயங்குளம் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி.

கணேசனுக்கு கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லை. அவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு சென்றனர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் சம்பவத்தன்று இரவு சோளங்குருணி பகுதியில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கணேசனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் கணேசனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை செய்து வந்தனர். ஆனாலும் பலனின்றி கணேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

பெருங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர்கான் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News