செய்திகள்
கைது

ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2021-04-23 10:30 GMT   |   Update On 2021-04-23 10:30 GMT
ஆம்பூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த மணியாரகுப்பம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் உமராபாத் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதர் மறைவில் அமர்ந்து ஒருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரிந்தது.

அவரை, போலீசார் பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (வயது 30) எனத் தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News