செய்திகள்
கோப்புபடம்

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு - பெண் கால்நடை டாக்டர் போலீசில் புகார்

Published On 2021-04-23 10:14 GMT   |   Update On 2021-04-23 10:14 GMT
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கால்நடை டாக்டர். இவர் தனது கணவர் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கோவை:

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கால்நடை டாக்டர். இவர் தனது கணவர் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது:-

திருமணத்தின் போது எனது பெற்றோர் வரதட்சணையாக 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் கொடுத்தனர். திருமணமான 4 நாட்களில் எனது கணவருக்கு போதை பழக்கம் இருப்பதும், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து நான் கேட்டபோது எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினர். நகைகளை அடகு வைத்து செலவு செய்து விட்டு திருப்பி தர மறுக்கின்றனர். மேலும் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கால்நடை டாக்டரின் கணவர் அவரது குடும்பத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News