செய்திகள்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

Published On 2021-04-23 06:12 GMT   |   Update On 2021-04-23 06:12 GMT
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று தமிழகத்தில் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்பலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
Tags:    

Similar News