செய்திகள்
தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் தடுப்பூசிக்கு சில இடங்களில் பற்றாக்குறை உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும். தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள்.
* செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
* செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்.
* கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.
* ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசிக்கு சில இடங்களில் பற்றாக்குறை உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும். தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள்.
* குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசி உடனே வழங்க வேண்டும்.
* செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
* செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்.
* கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.
* ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.