செய்திகள்
கோவை மாவட்டத்தில் 689 பேருக்கு கொரோனா- பெண் பலி
கோவை மாவட்டத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கோவை:
கோவை மாவட்டத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் 300 பேர் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது தினமும் 600 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 22 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்து 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று ஒரே நாளில் 460 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 202-ஆக இருக்கிறது. தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது பெண் உயிரிழந்தார்.
இதனால், மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 710 ஆக உயர்ந்தது.