செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 30 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.