செய்திகள்
கைது

பரமத்தி வேலூரில் அழகிகளை வைத்து விபசாரம்- பெண் உள்பட 5 பேர் கைது

Published On 2021-04-22 09:52 GMT   |   Update On 2021-04-22 09:54 GMT
பரமத்தி வேலூரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வடக்கு நல்லியம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து தொடர்ந்து விபசாரம் நடத்தப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விபச்சாரம் நடந்த வீட்டை சுற்றிவளைத்து திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் விபச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த 10 அழகிகளும், 2 ஆண்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.

வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் மனைவி சாமுண்டீஸ்வரி(53), அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட வைத்த திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறையை சேர்ந்த சங்கர் (45), திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் (55) மற்றும் அழகிகளிடம் உல்லாசாமாக இருக்க வந்திருந்த 2 பேர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், சங்கர், ஜோசப் உள்ளிட்ட 4 பேரை ராசிபுரம் கிளை சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

Similar News