செய்திகள்
பேக்கரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமண வயதுடைய தனது பேத்தியின் திருமணத்தை நடத்திவைக்க போதுமான பணம் இல்லாததால் மிகுந்த மன வேதனையின் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர், திருச்சி சாலை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாட்களாகவே தலைவலி மற்றும் மூல நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி வரகனேரி தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேவதி (22). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால், தனது பாட்டி சுசீலாவின் (70) அரவணைப்பில் ரேவதி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திருமண வயதுடைய தனது பேத்தியின் திருமணத்தை நடத்திவைக்க போதுமான பணம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் காணப்பட்டார்.
நேற்று சுசீலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுசீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர், திருச்சி சாலை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாட்களாகவே தலைவலி மற்றும் மூல நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி வரகனேரி தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேவதி (22). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால், தனது பாட்டி சுசீலாவின் (70) அரவணைப்பில் ரேவதி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திருமண வயதுடைய தனது பேத்தியின் திருமணத்தை நடத்திவைக்க போதுமான பணம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் காணப்பட்டார்.
நேற்று சுசீலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுசீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.