செய்திகள்
கோப்புப்படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 535 பேர் பாதிப்பு

Published On 2021-04-20 17:59 GMT   |   Update On 2021-04-20 17:59 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து 47 ஆயிரத்து 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 535 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 51 ஆயிரத்து 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 735 பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்து உள்ளார்.
Tags:    

Similar News