செய்திகள்
கைது

சிப்காட் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2021-04-20 15:01 GMT   |   Update On 2021-04-20 15:01 GMT
சிப்காட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை சிப்காட் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 26). வேலூர் மாவட்டம், வேலூர் கன்னி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர்கள் 2 பேரும் நேற்று சிப்காட் பஸ் நிறுத்தம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீசார் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட திவாகர் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News