செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற 4 பேர் கைது
குளித்தலை அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, சிவாயம், கருங்கலாப்பள்ளி, பரளி நால்ரோடு ஆகிய பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்று கொண்டிருந்த கணேசன் (வயது 63), வையாபுரி (70), குமார் (50), சிவானந்தம் (55) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.