செய்திகள்
யானை

ஆம்பூர் அருகே ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசம்

Published On 2021-04-19 14:32 GMT   |   Update On 2021-04-19 14:32 GMT
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை காட்டுயானை புகுந்து வாழை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று பொன்னப்பல்லி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை விவசாயிகளான மாதப்பனின் வாழைத்தோட்டம், விஜயனின் கேழ்வரகு பயிர் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒற்றை காட்டுயானையால் சேதமான பயிர்களுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News