செய்திகள்
விபத்து

துவரங்குறிச்சி அருகே லாரி மோதி மண்டி உரிமையாளர் பலி

Published On 2021-04-18 13:51 GMT   |   Update On 2021-04-18 13:51 GMT
துவரங்குறிச்சி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் மண்டி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டி சேர்ந்தவர் வீரப்பன்(வயது 74). இவர் துவரங்குறிச்சியில் விவசாய விளைபொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் மண்டி நடத்தி வந்தார். நேற்று காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவந்தம்பட்டியில் பெட்ரோல் பங்கில் தனது மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, மதுரை நோக்கி சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News