செய்திகள்
கைது

கோவையில் தடையை மீறி மது விற்ற 25 பேர் கைது

Published On 2021-04-18 10:30 GMT   |   Update On 2021-04-18 10:30 GMT
கோவையில் தடையை மீறி மது விற்ற 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவையில் தடையை மீறி கள்ளத்தனமாக பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் மற்றும் புறநகர் போலீசார் ஆனைமலை, நாஞ்சிப்பாளையம், பொள்ளாச்சி, ஆழியார் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்றதாகவும், டாஸ்மாக் கடை அருகே நின்று மது விற்றதாகவும் 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News