செய்திகள்
கொலை

புளியரை அருகே புதுப்பெண் வெட்டிக்கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2021-04-18 04:56 GMT   |   Update On 2021-04-18 04:56 GMT
புளியரை அருகே குடும்ப தகராறில் திருமணமாகி 7 மாதமே ஆவதால் புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது35).

இவருக்கும், புளியரை அருகே உள்ள கீழபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கஸ்தூரி (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நாள் முதலே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கஸ்தூரி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்துள்ளார்.

நேற்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்வதற்காக கண்ணன் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் அங்கு இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஸ்தூரியின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News