செய்திகள்
பனியன் நிறுவனத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை படத்தில் காணலாம்.

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் துணிகள் எரிந்து நாசம்

Published On 2021-04-17 21:44 GMT   |   Update On 2021-04-18 10:06 GMT
திருப்பூர் 15 வேலம்பாளையம் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. நேற்று இந்த நிறுவனத்தின் 2-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் 2-வது மாடி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் முழுவதும் பனியன் துணிகள் இருந்ததால் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் போராடி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News