செய்திகள்
திருச்சியில் ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கால் வலியால் அவதிப்பட்டு வந்த ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 59). ரெயில்வேயில் டிராக் மேனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரெயில்வே தண்டவாளத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது இடது காலில் பலத்த அடிபட்டது. இதனால் 6 மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மிகுந்த வலியாலும், மன உளைச்சலாலும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.