செய்திகள்
முககவசம்

ஒரே நாளில் ரூ.1.5 லட்சம் அபராதம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2021-04-17 12:35 GMT   |   Update On 2021-04-17 12:35 GMT
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மதுரை:

மதுரை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி அபராதமும் வசூல் செய்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 1-வது மண்டலத்தில் ரூ.28 ஆயிரமும், 2-வது மண்டலத்தில் ரூ.21 ஆயிரத்து 700-ம், 3-வது மண்டலத்தில் ரூ.35 ஆயிரமும், 4-வது மண்டலத்தில் ரூ.48 ஆயிரத்து 600-ம், பறக்கும் படையினர் ரூ.15 ஆயிரத்து 700-ம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனர்.
Tags:    

Similar News