செய்திகள்
கோப்பு படம்.

வால்பாறையில் காதல் திருமணம் செய்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-17 11:12 GMT   |   Update On 2021-04-17 11:12 GMT
வால்பாறையில் மனைவி பிரிந்து சென்ற கவலையல் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிகல் எஸ்டேட்டை சேர்ந்தவர் விஜய் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் சுகன்யா என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வேலைக்கு செல்லும் விஜய் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக சுகன்யா கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து சென்றார்.இதனால் விஜய் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது உடலில் மண்எண்ணையை ஏற்றி தீப்பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று விஜயை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜய் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News