செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நடிகர் விவேக் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published On 2021-04-17 03:18 GMT   |   Update On 2021-04-17 09:24 GMT
பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

* சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் நடிகர் விவேக்.



* கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு.

* பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்.

* எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.

* தமிழகத்திற்கு பெருமை சேர்த்த  விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

* நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News