செய்திகள்
தூத்துக்குடியில் மது விற்ற 7 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.